ஆண்களை விஞ்சும் பெண்கள் எண்ணிக்கை: கருக்கலைப்பில் சென்னை முதலிடம்!!
சென்னை:
தமிழ்நாட்டில் கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.
தேசிய மற்றும் தமிழக அளவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தூத்துக்குடி உட்பட 14 தமிழகமாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழகத்தில் 6.40 கோடி மக்கள் உள்ளனர். உலகளவில் 1,000 ஆண்களுக்கு 990 பெண்களும், இந்தியாவில் 993 பெண்களும்,தமிழகத்தில் 987 பெண்களும் உள்ளனர்.
தஞ்சாவூரில் 1021 பெண்களும், புதுக்கோட்டையில் 1,015 பெண்களும், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகியமாவட்டங்களில் 1,014 பெண்களும், விருதுநகரில் 1,012 பெண்களும், கரூரில் 1,010 பெண்களும், பெரம்பலூரில் 1,006பெண்களும், திருச்சியில் 1,001 பெண்களும் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் (929) உள்ளனர். இதற்கு அடுத்ததாக தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 938 பெண்கள் உள்ளனர்.
பெண் சிசுக்கொலை காரணமாகத் தான் இந்த மாவட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சமீபத்தியகணகெடுப்பில் தெரியவந்துள்ளது.
கருக்கலைப்பில் சென்னை முதலிடம்:
அதே போல கருக்கலைப்பில் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் சென்னையில் 13,824 கருக்கலைப்புகள்நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 6,710 கருக்கலைப்புகள் நடந்துள்ளன. இது கணக்கில் வந்துள்ளகருக்கலைப்புகள் எண்ணிக்கை தான். கணக்கில் இல்லாமல் இதைப் போல மேலும் சில மடங்கு கருக்கலைப்புகள்நடந்திருக்கலாம்.
கல்வி அறிவை பொறுத்த வரை கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இம்மாவட்டத்தில்88.11 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆண்களில் 90.88 சதவீதமும், பெண்களில் 85.38 சதவீதம் பேரும்இம்மாவட்டத்தில் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 59.23 சதவீதம் பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். இந்த இரு மாவட்டங்கள் தான்தமிழகத்தில் கல்வியறிவு குறைந்த மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications