For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவின் வெடிகுண்டு திட்டம்: திமுக புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவினர் காரில் வெடிகுண்டுகளுடன் வலம் வருவதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் எண்ணத்தில் அதிமுகவினர் டிஎன் 01 ஜே 123 என்ற வாகனத்தில் பயங்கர ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளுடன் வலம் வருகிறார்கள்.

இது குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் வழக்கறிஞர்கள் கிரி ராஜன், மாதவரம் செந்தில் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தேர்தல் பார்வையாளர் நந்தகுமாரிடமும், காஞ்சிபுரம் தேர்தல் அதிகாரி அன்பழகனிடமும் புகார் தெரிவித்தனர்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் காந்தி நகர், சதாவரம் பகுதிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் சோமசுந்தரம் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X