கள்ள ஓட்டுக் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் 295 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்டகலெக்டர் தங்கசுவாமி தெரிவித்தார். இவர்கள் கள்ள ஓட்டு போடுவதற்காக திமுக மற்றும் அதிமுகவினரால் அழைத்துவரப்பட்டவர்கள் என தெரிகிறது.
தொகுதியிலுள்ள அனைத்து திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டுவருகிறது. அனுமதி இல்லாத வெளியாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்று கண்காணித்து வருகிறோம்.
இதன்படி தொகுதியில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறையை மீறியதாக210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் 2500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர 400 துணை ராணுவத்தினரும்வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் நாளன்று பதட்டமான பகுதிகளில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள்.
வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபடுவோர்களை கண்டதும் சுட இவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications