அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி, விஜய்காந்த் ரசிகர்கள் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சி & கும்மிடிப்பூண்டி:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி, விஜய்காந்த் ரசிகர்கள் பெருமளவில்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தத் தொகுதிகளின் பொறுப்பாளர்களான அமைச்சர்களைச் சந்திக்கும் ரஜினி, விஜய்காந்த் மன்றத்தினர் தங்களது ஆதரவைத்தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்கழையும் பிரச்சாரத்தில் உடன் அழைத்துச் செல்ல அதிமுகவினருக்கு அமைச்சர்கள்உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் தொகுதியில் ரஜினி படம் போட்ட பனியன், ரஜினியின் பேனர்களுடனும் விஜய்காந்த் படம், மன்றக் கொடியுடனும்ஏராளமான ரசிகர்கள் அதிமுகவினருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெ இன்று முதல் 2வது கட்ட பிரச்சாரம்:

இந் நிலையில் காஞ்சி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 2வது கட்டப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் முதல் கட்டப் பிரசாரத்தை முடித்துள்ள ஜெயலலிதா இன்று தனது இரண்டாவதுகட்டப் பிரசாரத்தை காஞ்சிபுரம் தொகுதியில் மேற்கொள்கிறார்.

டோல்கேட் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, மாமல்லன் நகர், கங்கை கொண்டான் மண்டபம், கச்சேஸ்வரர்சன்னதி வழியாக திருக்காளிமேடு, பல்லவர்மேடு, புதுப்பாளையம் தெரு, தாயார்குளம், செவிலிமேடு, ஐய்யங்கார் குளம்உள்ளிட்ட 7 இடங்களில் பேசுகிறார்.

இதையடுத்து நாளை கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட 12 ஊர்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசுகிறார்.

வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக தலைவர்கருணாநிதி நாளை காஞ்சிபுரத்தில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

நாளை காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பேசுகிறார்கள்.

அதிமுக பேனர்களுடன் லாரி பறிமுதல்:

இந் நிலையில் காஞ்சிபுரத்தில் ஏராளமான அதிமுக பேனர்கள், கட் அவுட்கள், கொடிகளுடன் வந்த லாரியை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.

தான் சொல்லியதை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளுக்கு சிறப்புத் தேர்தல் பார்வையாளர் ராவ் கடும் எச்சரிக்கையும் விடுத்துவருவதால், இரு தொகுதிகளிலும் அதிகாரிகள் மிக விழிப்புணர்வுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட டோல்கேட், செட்டித் தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி சாலையில் கொடிகள்கட்டப்பட்டு வந்தன.

இதையடுத்து அங்கு விரைந்த மாவட்ட கோட்டாட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு,நின்றிருந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த அதிமுக பேனர்களையும் கட்டப்பட்டிருந்த பேனர்களையும் அகற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+