டெல்லி-சிகாகோ நேரடி சர்வீஸ்- ஏர் சஹாரா அறிவிப்பு
டெல்லி:
ஏர் சஹாரா நிறுவனத்தின் சார்பில் டெல்லி-சிகாகோ இடையே விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதுதவிர செப்டம்பர் மாதத்திற்குள் லண்டனுக்கும் நேரடி விமானம் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ஏர் சஹாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா கூறுகையில், எங்களதுநிறுவனத்தின் சார்பில் டெல்லியிலிருந்து லண்டனுக்கு செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் விமானப் போக்குவரத்துதொடங்கப்பட உள்ளது.
மேலும் மே 11 முதல் ஜூன் 15ம் தேதி வரை சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு குறைந்த கட்டணத்தில் விமானங்களைஇயக்குகிறோம். டெல்லியிலிருந்து சிங்கப்பூர் சென்று வர ரூ.10,000 கட்டணம் மட்டுமே வசூலிக்கிறோம். சிங்கப்பூர் திட்டத்தில்அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
கோலாலம்பூர் திட்டத்திற்கும் இதே கட்டணத்தை தான் வசூலிக்கிறோம். இந்த திட்டத்தில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவுசெய்யப்பட்டு வருகிறது என்றார்.