அப்பாவி சிறுமிகளை சிறை வைத்த அமெரிக்கா!
நியூயார்க்:
அமெரிக்காவில் சதிச் செயலில் ஈடுபட வந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த 16வயதான இரு முஸ்லீம் சிறுமிகளை அந் நாட்டு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவர்கள் மீதான புகார்களுக்கு எந்தவிதஆதாரமும் அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை.
பங்களாதேசைச் சேர்ந்த சிறுமியும், கினியா நாட்டைச் சேர்ந்த சிறுமியும் கடந்த மார்ச் 24ம் தேதி தனித்தனியாக வெவ்வேறுவிமானங்களில் நியூயார்க் வந்திறங்கினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தை அப்படியே கமுக்கமாக மூடி மறைத்து இருவரையும் அதிகாரிகள் விடுவித்தனர்.
இவர்களில் பங்களாதேசைச் சேர்ந்த சிறுமியும், அவளது தாயாரும், இரு சகோதரர்களும் (இவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில்வசித்து வந்தவர்கள்) அமெரிக்காவில் இருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு டாக்கா புறப்பட்டுவிட்டனர்.
கினியா சிறுமி தொடர்ந்து நியூயார்க்கிலேயே தங்கியுள்ளார்.
அமெரிக்க அரசின் இந்த மனித உரிமை மீறலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.