தீவிரவாதி: பிரான்ஸ் விமானத்தை திருப்பிட்ட யுஎஸ்
வாஷிங்டன்:
பிரான்சில் வந்த விமானத்தில் தீவிரவாதி ஒருவன் இருப்பதாகக் கூறி அந்த விமானத்தை அமெரிக்கா வேறு இடத்தில் தரையிறங்க வைத்தது.
பாரிஸில் இருந்து பாஸ்டன் நகருக்கு வந்த ஏர் பிரான்ஸ்-332 விமானத்தில் தீவிரவாதியும் இருப்பதாகக் கூறி அந்த விமானத்தை மெய்ன்நகர விமான நிலையத்துக்கு அமெரிக்கா திருப்பி விட்டது.
நியூயார்க் தாக்குதலுக்குப் பின், அமெரிக்காவுக்குச் செல்லும் சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் பட்டியல், விமானம்புறப்பட்டவுடன் அந்நாட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையடுத்து அந்த விமானத்தில் வரும் பயணிகளின் பின்னணி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். தங்களிடம் உள்ளதீவிரவாதிகள் குறித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள யாராவது அந்த விமானத்தில் வருகிறார்களா என ஆய்வு செய்யும் எப்பிஐ,சந்தேகப்படும்படி யாராவது விமானத்தில் இருப்பதாகக் கருதினால், அந்த விமானம் தரையிறங்கியதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், தங்களிடம் உள்ள தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ள ஒருவனின் பெயர் கொண்ட பயணி, பிரான்ஸ் விமானத்தில்வருவதாக எப்பிஐ கூறியுள்ளது. இதையடுத்து விமானத்தை பாஸ்டனில் இறங்க அனுமதிக்காமல் மெய்ன் நகருக்குத் திருப்பி விட்டுள்ளனர்.
அந்தப் பயணியிடம் விசாரணை நடத்திவிட்டு அவரைத் திருப்பி பிரான்சுக்கே அனுப்பப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.