காஞ்சி. நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு
காஞ்சிபுரம்:
இடைத் தேர்தல் பிரசாரத்தின் போதும், வாக்குப் பதிவின் போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியோர் மீது காஞ்சிபுரம்மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாக தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் லலீத் பாராட்டுதெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர்களில் ஒருவராக செயல்பட்ட லலீத் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடைபெற்றஇடைத் தேர்தலில் 74 வாக்குச் சாவடிகளை நான் ஆய்வு செய்தேன். மிகவும் சுமுகமாக வாக்குப் பதிவு நடக்க உதவிய அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள். குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.
தன்னை கைது செய்தது குறித்து மக்களவை சபாநாயகரிடம் புகார் கொடுக்கப் போவதாக ஏ.கே.மூர்த்தி கூறினார். இருப்பினும்தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படவர்கள் அன்று மாலையேவிடுவிக்கப்பட்டு விட்டனர் என்றார் லலீத்.












Click it and Unblock the Notifications