பாவாணன் கைது செல்லாது: பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பு !
சென்னை:
பழ.நெடுமாறனுடன் புதுக்கோட்டை பாவாணன், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் செல்லாது என்று பொடா மறுஆய்வுக் குழு கூறியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பாவாணன், கடந்த 2002ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த கூட்டத்தில்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பழ. நிெடுமாறன்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டபோது, பாவாணனும் கைதானார்.
இந்த மனுவை விசாரித்த பொடா மறு ஆய்வுக் குழு, பொடா சட்டத்தின் கீழ் பாவாணனைக் கைது செய்ததற்கு எந்தவிதஅடிப்படை ஆதாரம், முகாந்திரமும் இல்லை. எனவே இந்த கைது செல்லாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே வைகோ, பழ. நெடுமாறன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாதுஎன்று பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.