வருடந்தோறும் ரூ.1300 கோடிக்கு தலைமுடி ஏற்றுமதி செய்யும் இந்தியா
ஐதராபாத்:
இந்திய தலைமுடிக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் வருடந்தோறும் ரூ.1300 கோடிக்கு இந்தியாவிலிருந்துதலைமுடி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆண்களுக்கோ, பெண்களுக்கோ தலைமுடி நீளமாக, சுருள் சுருளாக இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தற்போது இந்ததலைமுடியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
இதனால் இந்தியாவிலிருந்து கடந்த 1960ம் ஆண்டிலிருந்து தலைமுடி ஏற்றுமதி தொடங்கியது. தற்போது இந்த முடி ஏற்றுமதி தொழில்கொடி கட்டிப்பறக்கிறது.
திருப்பதி கோவில் தேவஸ்தானம் நீள முடி 1 கிலோ 8,500 ரூபாய்க்கும், குட்டை முடியை 1 கிலோ 50 ரூபாய்க்கும் விற்கிறது. இவற்றைவாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் ரூ.1300 கோடிக்கு தலைமுடியை ஏற்றுமதி செய்கின்றன.
இந்திய தலைமுடிக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளில்பல ரகங்களில் தலை முடி கிடைக்காததே இதற்கு காரணம்.
ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இந்த தலைமுடிகள் மூலம் அமினோ அமிலம் போன்ற ரசாயனங்களை தயாரிக்கின்றனர்.