பாவாணன் விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்
சென்னை:
புதுக்கோட்டை பாவாணனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழ. நெடுமாறன், வைகோ, சுபவீரபாண்டியன் உள்ளிட்ட சிலரை அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்தது செல்லாது, அதற்கான முகாந்திரமே இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்யுமாறு பொடா மறு ஆய்வுக் குழுஉத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே நடந்த கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி பாவாணன் மீது பொடாசட்டத்தின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. கைதுசெய்யப்பட்ட அவர், கடலூர் சிறையில் ஒன்றரை வருடம் அடைக்கப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications