மயக்க மருந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பையிலிருந்து சென்னை வந்த ரயிலில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து,நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை வரும் ரயில்களில் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிக்கும் கும்பலின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தக் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் உள்ள ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் வைத்துத் தான் தனது கைவரிசையைக் காட்டுகிறது.

இந் நிலையில் மும்பையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்துகொடுத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வேலூரைச் சேர்ந்த சந்திரசேகரன், வரலட்சுமி, ஜெயலட்சமி, தேவி, கண்ணம்மா ஆகிய ஐந்து பேரும், மும்பையிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டக்கல் என்ற இடத்தில் ரயில் நின்ற போது அவர்களுக்கு ஒருவர் குளிர்பானம்கொடுத்துள்ளார். அதன் பின்னர் ஐந்து பேரும் மயக்கமாகி விட்டனர்.

இதன் பிறகு அவர்களிடமிருந்த நகை, பணம் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் வந்தடைந்த போது ஐந்து பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களைரயில்வே போலீஸார் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என்பது தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+