பொய் வழக்குப் போட முயற்சி: திமுக எம்.எல்.ஏ. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸார் தன் மீதுபொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிப்பதாக திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதன் புகார்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிக்கு இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதினம் முதல், எனக்கு எதிராக பொய்யான புகார் கூறுமாறு திமுகவினரை போலீஸார் தொந்தரவு செய்து வருகிறார்கள்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு என் மீது போலீஸார் 6 வழக்குகளைப் போட்டனர். ஆனால் நீதிமன்றம்அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது.
அதுபோலவே, இப்போதும் மக்களின் உதவியுடனும், நீதிமன்றத்தின் உதவியுடனும், போலீஸாரின் சதித் திட்டத்தைமுறியடிப்பேன். போலீஸாரின் நடவடிக்கையை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரங்கநாதன்.












Click it and Unblock the Notifications