குற்றாலத்தில் சீசன் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
கேரளாவில் பருவ மழை பெய்வதற்கான அறிகுறியாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், குற்றாலம் அருவிகளில் நீர் கொட்டத்தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டுக்கான மழை ஒரு வாரம்தாமதமாக பெய்யத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டத்தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து தொடங்கியுள்ளது.
இந்த மழை நீடித்தால் குற்றால சீசன் முன் கூட்டியே (வழக்கமாக ஜூன் இறுதியில் தொடங்கும்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications