ஜூன் 2ல் அரசுப் பள்ளிகள் திறப்பு
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 2"ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு வழங்கும் இலவச பாடப்புத்தக விநியோகம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மற்றும் இறுதியாண்டுத் தேர்வுக்கான அட்டவணைகளும்பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது. எனவே 1 முதல் 10ம் வகுப்புவரையிலான வகுப்புகள் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கும். பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள்மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக 11வது வகுப்புகளையும் தொடங்க அரசு நடவடிக்கைஎடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications