குருமூர்த்தி கோர்ட்டில் சரண்; ஜாமீனில் விடுதலை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஆடிட்டர் குருமூர்த்தி, காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரைகள் எழுதி வந்தார்.இதையடுத்து அவரை தனிப்படை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர்.
அதன்படி விசாரணை நடத்திய போலீஸார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில்,குருமூர்த்திக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து முதலாவது குற்றவியல் நீதிபதிஉத்தமராஜ் திங்கள்கிழ மாலை வாரண்ட் பிறப்பித்தார்.
இந்தப் பின்னணியில் இன்று காலை காஞ்சிபுரம் வந்த குருமூர்த்தி நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர்குருமூர்த்தி தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி குருமூர்த்திக்கு ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார்.
குருமூர்த்திக்கு காஞ்சி. கோர்ட் பிடிவாரண்ட்












Click it and Unblock the Notifications