தமிழகத்தில் ரயில் புரட்சி: வேலு தகவல்!
திண்டிவனம்:
தமிழகத்தில், ரயில்வே துறையில் சத்தம் இல்லாமல் பெரும் புரட்சி நடந்து வருவதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர்ஆர்.வேலு கூறியுள்ளார்.
அதேபோல, மதுரை முதல் போடி நாயக்கனூர் வரையிலும், விருதுநகர் முதல் மானாமதுரை வரையிலும், மயிலாடுதுறை முதல்காரைக்குடி வரையிலும், திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலும் அகலப் பாதை பணிகள் நிறைவடைந்து ரயில்கள்நீட்டிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 1800 வேலைகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டு, அதில் 1200 வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. மேலும் 600வேலைகளுக்கு விரைவில் பணிகள் தொடங்கும். அனைத்துப் பணிகளும் நான்கு ஆண்டுகளுக்குள் முடிவடையும்.
தமிழகத்தில் புல்லட் ரயில் விடுவது குறித்து பிரான்ஸ், ஜப்பான் நாட்டு நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மேலும் 2 ரயில்கள் விடப்படும். ஒரு ஆண்டில் திண்டிவனம் ரயில் நிலையம் மாதிரி ரயில்நிலையமாக மாறி விடும் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications