அகற்றப்பட்ட நேரு சிலை மீண்டும் திறப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து அகற்றப்பட்ட நேரு சிலை மீண்டும் அதே பகுதியில் இன்றுநிறுவப்படுகிறது.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ரூ. 28 கோடியில் அடுக்கு மேம்பாலத்தைக் கட்ட மத்திய தேசியநெடுஞ்சாலைஆணையம் முடிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதற்கான அடிக்கல் நாட்டு விழா திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் நடந்தது.

தற்போது பாலம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து கடந்த 1987ம் ஆண்டுமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர். ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட நேரு சிலையை கடந்த 6ம் தேதிரவுண்டானாவிலிருந்து அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அகற்றப்பட்ட நேரு சிலை எங்கேயோ புறக்கணிக்கப்பட்ட நிலையில் போடப்பட்டிருப்பதாக செய்திகள்பரவியதால், காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால்,நேரு சிலையின் நிலை குறித்து அவர்கள் கொஞ்சம் கூட கருத்து தெரிவிக்கவில்லை.

இதுவரை தமிழக அரசின் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் நேரு சிலை இருந்தது. தற்போது தேசியநெடுஞ்சாலை ஆணையத்திடம் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட சிலையை ரவுண்டானாவுக்கு அருகே தற்காலிகமாக நிறுவியுள்ளனர். பாலம் கட்டி முடிக்கப்படும்வரை சிலை அங்கேயே இருக்கும். அகற்றப்பட்டு வேறு இடத்தில் நிறுவப்பட்டுள்ள சிலையை இன்று மாலை 5மணிக்கு மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு திறந்து வைக்கிறார். இதற்காக நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ்தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+