For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்வானி மன்னிப்பு கேட்க வேண்டும்: வி.எச்.பி.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாபர் மசூதி இடிப்புக்காக பாகிஸ்தானில் வருத்தம் தெரிவித்து பேசியதற்காக பாஜக தலைவர் அத்வானி மன்னிப்பு கேட்கவேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம்தேதி பாபர் மசூதிஇடிக்கப்பட்டது எனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான, வருத்தம் தரக் கூடிய ஒரு சம்பவம் என அத்வானி பாகிஸ்தானில்பேசியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இந்துக்களுக்கு அத்வானி துரோகம் இழைத்து விட்டார். இந்துக்களை கைவிட்டு விட்டார்.

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகப் போர் தொடுப்பதாக முன்பு குற்றம்சாட்டியவர்தான் அத்வானி. இப்போது அங்கு சென்றுபாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்து பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. உடனடியாக தனது பேச்சுக்குவருத்தம் தெரிவித்து இந்துக்களிடம் அத்வானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார் சிங்கால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X