எல்லை மீறுகிறார் ஜெயலலிதா: ராமதாஸ்
திண்டிவனம்:
பாண்டிச்சேரி மாநாட்டில் தமிழக மத்திய அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா குறை கூறியுள்ளதற்கு டாக்டர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், பத்திரிகை என்று எதுவானாலும் மத்திய அமைச்சர்களையும், மத்திய அரசையும் குறை கூறாதநாளே இல்லை. தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களை அவர் எதிரிகள் போல நினைக்கிறார்.
பொதுப் பிரச்சினைகள் குறித்து அவரோ, அவரது அமைச்சர்களோ மத்திய அமைச்சர்களுடன் விவாதிப்பதும் கிடையாது.திட்டக்குழுவுடன் பேச்சு நடத்தச் செல்லும் ஜெயலலிதா, அதற்கு நிதி ஒதுக்கும் அமைச்சரை சந்திக்காமலேயே செல்கிறார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவது போன்ற காட்சிகளுக்கு ஆகஸ்ட்மாதத்திலிருந்து தடை விதிக்கப்படும் என்ற மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications