திருட்டு விசிடி: குண்டர் சட்ட நடவடிக்கை செல்லும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருட்டு விசிடி விற்றவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லும் என்று குண்டர் சட்ட மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் திருட்டு விசிடி விற்றதாக சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, நசீர், தவுலத் ரகுமான், ஆரிப் ஆகியோரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தங்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கோரி குண்டர் சட்ட மறு ஆய்வுக் குழுவிடம் நான்கு பேரும் மேல் முறையீடு செய்தனர். இவர்களதுகோரிக்கையைப் பரிசீலித்த 3 நீதிபதிகள் அடங்கிய மறு ஆய்வுக் குழு மனுக்களை தள்ளுபடி செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications