கம்ப்யூட்டர் கல்வி: தனியார் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 57 தனியார் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் கல்விக்கான இடங்களைக் குறைக்க அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஐ.டி. (தகவல் தொழில் நுட்பம்), எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள்குறைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர சுமார் 57,000 மாணவர்களே விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிகளில் சுமார் 20,000 இடங்கள் காலியாகஇருக்கும் நிலை நிலவியது. இந் நிலையில் தான் கல்லூரிகளில் இடங்களைக் குறைத்து தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதனால், கம்ப்யூட்டர் கல்வியில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications