ஜூன் 23ல் கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு வரும் 23ம் தேதி கூடுகிறது.
காவிரி நதி நீர் ஆணையம் பிரதமரின் கண்காணிப்பிலும், காவிரிக் கண்காணிப்புக் குழு மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் இயங்கி வருகின்றன.
இதைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி இந்தக் குழு நீர் வளத்துறைச் செயலாளர் ஹரிநாராயணன் தலைமையில் கூடுகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம்,பாண்டிச்சேரி மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்பர்.
இக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை கண்காணிப்புக் குழு வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இந்தக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து இதன் ஆயுளை நீட்டிக்க மத்திய அரசுவிரைவில் உத்தரவு வெளியிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications