For Daily Alerts
Just In
நெல்லை "ஜாதி கொலை: 3 பேர் சரண்
மதுரை:
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஜாதிக் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை நீதிமன்றத்தில்சரணடைந்தனர்.
இந்தக் கொலையால் அப்பகுதியில் ஜாதிக்கலவரம் வெடித்தது. கொலையைக் கண்டித்து கண்ணனின் ஆதரவாளர்கள் எதிர்தரப்பினரது வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 15 வீடுகள், 5 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாயின.
கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந் நிலையில் இக் கொலை வழக்கில்தேடப்பட்டு வந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 25), குமார்(வயது 27) மற்றும் ராமர்(வயது 24) ஆகிய 3 பேர்மதுரை 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, June 9, 2005, 5:30 [IST]