For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை "ஜாதி கொலை: 3 பேர் சரண்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஜாதிக் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை நீதிமன்றத்தில்சரணடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை அடுத்த கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த கண்ணன் (வயது 32) என்பவர் கடந்த வாரம்அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையால் அப்பகுதியில் ஜாதிக்கலவரம் வெடித்தது. கொலையைக் கண்டித்து கண்ணனின் ஆதரவாளர்கள் எதிர்தரப்பினரது வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 15 வீடுகள், 5 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாயின.

கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந் நிலையில் இக் கொலை வழக்கில்தேடப்பட்டு வந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 25), குமார்(வயது 27) மற்றும் ராமர்(வயது 24) ஆகிய 3 பேர்மதுரை 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X