சங்கரராமன் கொலை வழக்கு ஆவணங்கள் திருட்டு? காஞ்சி நீதிமன்றத்தில் துணிகரம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நடந்த காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஓட்டைப் பிரித்து, பெட்டிகளை உடைத்துஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களும்திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள முதல் வகுப்பு குற்றவியல்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்திடமும் இந்த நீதிமன்றத்தில் தான் குறுக்கு விசாரணைநடந்தது.
நீதிபதி உத்தமராஜின் அறைக்கு அருகே ஆவணங்களை பாதுகாக்கும் அறை உள்ளது. இந்த அறையில் தான் இந்த நீதிமன்றத்தில்நடந்து வரும் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் மேற்கூரை ஓடுகளை பிரித்து சிலர் உள்ளே புகுந்துள்ளனர். அந்தஅறையில் இருந்த ஆவணங்களை அவர்கள் கலைத்து போட்டுள்ளனர். சில ஆவணங்களும் திருடு போனதாகத் தெரிகிறது.
நேற்று நீதிமன்றத்திற்கு வந்த ஊழியர்கள், ஆவண அறையின் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அமல்ராஜ் தலைமையில் போலீஸார்நீதிமன்றத்திற்கு விரைந்து வந்து ஆவண அறையை பார்வையிட்டனர்.
பின் நீதிமன்ற ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் விரைந்துவந்து தடயங்களை பதிவு செய்தனர்.
நீதிமன்ற ஊழியர்கள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இதன் பிறகே திருடப்பட்டஆவணங்கள் என்பது குறித்து தெரிய வரும்.
சுமார் 6 மாதங்களுக்கு பிறகு ஜெயேந்திரர் நேற்று தான் காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பினார். இந் நிலையில் நடந்துள்ள இச்சம்பவம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications