ஜெ ஆட்சியில் தேர்தல் நடத்தினால்...: ஆணையத்திடம் திமுக எம்.பிக்கள் புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அதிமுக ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்தினால் நியாயமான முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.பிக்கள்குழு மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து எம்.பி. கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுக ஆட்சியின் கீழ் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களையும், அப்போது நடந்த முறைகேடுகள், வன்முறைச் சம்பவங்களையும் எங்களதுமனுவில் விரிவாக விளக்கியுள்ளோம்.
அதிமுக ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் அது நியாயமான, நேர்மையான தேர்தலாக இருக்காது என்பதையும் தேர்தல் ஆணையர்களிடம்விளக்கினோம். அச்சப்படும் அளவுக்கு எதுவும் நடந்து விடாது. தேர்தல் ஆணையம் உறுதியான, நேர்மையான நிடவடிக்கையை மேற்கொள்ளும்என்று கோபால்சாமி எங்களிடம் தெரிவித்தார் என்றார்.












Click it and Unblock the Notifications