For Daily Alerts
Just In
கடலூர்: ஆயுதக் குவியலுடன் வேன் பறிமுதல்
கடலூர்:
கடலூர் அருகே ஆயுதக் குவியலுடன் மாருதி ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வேனில் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் அதில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேனில் யாரும் இல்லை. டயர் பஞ்சர் ஆயிருந்தது. அந்த வேனைப் போலீஸார் சோதனையிட்டபோது அதில் 6 நாட்டுவெடிகுண்டுகள், 3 பட்டாக் கத்திகள், சிறிய கத்தி ஒன்று ஆகியவை இருந்தன.
இந்த வாகனம் விழுப்புரம் பதிவு எண்ணைக் கொண்டுள்ளது. அதன் உரிமையாளரை அடையாளம் காணும் பணியில்போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, June 16, 2005, 5:30 [IST]