சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்
சென்னை:
சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி வெயில் அடித்தது.இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் கடந்த 2 வாரங்களாக தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. நேற்றும்,இன்றும் சென்னையில் நுங்கம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் 103 டிகிரி வெயிலடித்தது.
இதனால் பகல் நேரங்களில் முக்கிய சாலைகள் கூட மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
மக்களை வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்குதல் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வானிலை மாற்றம்காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 30 கிமீ வேகத்தில் தரைக்காற்று வேகமாக வீசுகிறது.
இதன் காரணமாக கடல் காற்று தரைப்பகுதிக்கு வர முடியவில்லை. தரைக்காற்றின் வேகம் குறைய இன்னும் 3தினங்கள் ஆகலாம். இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் குறைய சில நாட்கள் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications