For Daily Alerts
Just In
ஹிமாச்சல பிரதேசம்: பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி
தர்மசாலா:
ஹிமாச்சல பிரதேசத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலியானார்கள்.20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தர்மசாலா அருகே ஒரு செங்குத்தான வளைவில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறிபயங்கர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த இடத்திலேயே 18 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, June 21, 2005, 5:30 [IST]