For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிமாச்சல பிரதேசம்: பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

தர்மசாலா:

ஹிமாச்சல பிரதேசத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலியானார்கள்.20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குஜராத் மாநிலம் வதோராவிலிருந்து இமாச்சல பிரதேசம் மணாலிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒரு பஸ்ஸில்புறப்பட்டனர். இந்த பஸ்ஸில் சுமார் 40 பேர் இருந்தனர்.

தர்மசாலா அருகே ஒரு செங்குத்தான வளைவில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறிபயங்கர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த இடத்திலேயே 18 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X