For Daily Alerts
Just In
திருச்சி அருகே 3 பேர் வெட்டிக் கொலை
திருச்சி:
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் பழிக்குப் பழியாக 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஜானகி ராமன், கிருஷ்ணகுமார், ஆனந்த குமார் ஆகியோர் கைதாகி பின்னர்ஜாமீனில் வெளியே வந்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆலம்பாக்கம் என்ற இடத்தில் சிலர் அவர்களை வழிமறித்து அரிவாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களால்சரமாரியாகத் தாக்கினர். இதில் நிலை குலைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.
இந்த படுகொலைச் சம்பவம் புள்ளம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயணனின் கொலைக்குப் பழிவாங்கவே இந்த மூன்று கொலைகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Tuesday, June 21, 2005, 5:30 [IST]