அத்வானி விலகினால் பாஜக சுத்தமாகும்: விஎச்பி
அகமதாபாத்:
ஜின்னா விவகாரத்தில் அத்வானியை விஎச்பி எந்த விதத்திலும் மன்னிக்காது. அவர் கட்சியை விட்டு விலகினால்தான் பாஜக சுத்தமாகும் என்று மூத்த விஎச்பி தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா கூறினார்.
இதில் மூத்த விஎச்பி தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா பேசுகையில்,
சர்தார் வல்லபாய் போல அத்வானியும் முதலில் இரும்பு மனிதராகத் தான் இருந்தார்.
ஆனால் பாகிஸ்தானுக்கு சென்ற அவர், அங்கு வைத்து பாபர் மசூதியை இடித்ததற்காக வருத்தப்பட்டதாககூறியதின் மூலமும், ஜின்னாவை புகழ்ந்து பேசியதின் மூலமும் அத்வானியை இனிமேலும் இரும்பு மனிதர் என்றுகூறுவதில் அர்த்தம் கிடையாது.
இனிமேல் அவரை அலுமினிய மனிதர் என்றோ, பேப்பர் மனிதர் என்றோ அல்லது பிளாஸ்டிக் மனிதர் என்றோதான் அழைக்க வேண்டும்.
அத்வானியை இனிமேல் எந்த விதத்திலும் விஎச்பி மன்னிக்காது. அவர் கட்சியை விட்டு வெளியேறினால் தான்பாரதிய ஜனதா கட்சி சுத்தமாகும். அவர் கட்சியை விட்டு விலகுவதோடு மட்டுமல்லாமல் தனது எம்பிபதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.