நாளை கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) டெல்லியில் கூடுகிறது.
கர்நாடக முதல்வர் தரம்சிங்கும், தங்களது மாநிலத்தில் மழை பெய்தால் தான் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியும் என்று கூறிவிட்டார்.
இந் நிலையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழணீத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும்கோரிக்கை விடுத்து வருகின்றன.
தமிழக அரசு காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து காவிரிகண்காணிப்புக் குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை மாநில தலைமைச்செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு குறித்து ஆராயப்படும். இதைத் தொடர்ந்து இக் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவுகள் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையடுத்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிட ஆணையம் உத்தரவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications