ஜெ. வழக்குகள்: வாதம் நாளைக்கு ஒத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை சேர்த்து விசாரிப்பதா அல்லது தனித்தனியாக விசாரிப்பதா என்பது குறித்த வாதத்தை நாளைக்கு ஒத்தி வைப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரேஇன்று அறிவித்தார்.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, லண்டனில்ஹோட்டல் வாங்கிய வழக்கு ஆகியவை விசாரிக்கப்பட்டு வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, சசிகலாவின் அக்காள் மகள் இளவரசி, சுதாகரன்ஆகியோரும், ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா, தினகரன், ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளையும்சேர்த்து விசாரிக்க ஜெயலலிதா கோரி வருகிறார்.

இதுதொடர்பாக தனி நீதிமன்றத்தில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டது. இருவழக்குகளையும் எப்படி விசாரிக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குவிளக்கம் கேட்டு வருமாறு ஜெயலலிதா தரப்புக்கு தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து இரு வழக்குகளையும் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை விளக்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்இளவரசி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து பெங்களூர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந் நிலையில் இன்று (புதன்கிழமை) பெங்களூர் நீதிமன்றத்தில், இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பது குறித்த தனதுதீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி பச்சாப்பூரே கூறியிருந்தார்.

இதன்படி, இன்று நீதிமன்றம் கூடியதும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளவரசிமுதலில் தாக்கல் செய்த மனுவின் மீதே தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரு வழக்குகள்குறித்து இனிமேல்உயர்நீதிமன்றத்தில் அணுக தேவையில்லை என்றும் அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும்தீர்ப்பளித்திருந்தது என்றார்.

அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்றார்.அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, எதிர்த்தரப்பு வாதங்களை கேட்பது உங்கள் முடிவை பொறுத்தது என்றுநீதிபதியிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து வாதத்தை நாளை கேட்பதாக நீதிபதி பச்சாப்பூரே அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+