துரையில் ஜூலை 2ல் சேது சமுத்திர தொடக்க விழா: பிரதமர் வருகிறார்
மதுரை:
மதுரையில் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவை ஜூலை 2ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்கள்உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் பர்னாலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்கள்,எம்எல்ஏக்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சூயஸ் கால்வாய் அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக சேர்மன் ரகுபதி கெய்ரோவிற்கு சென்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள்தரப்பிலான அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் விரைவில் சென்னையில் நடைபெறும்.
மண்டபத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் சேது சமுத்திரத் திட்ட அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்காக மாநில அரசிடம்நிலம் கேட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications