நாளை சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் பக்தர்கள் வெள்ளம்!
காரைக்கால்:
நாளை (திங்கள்கிழமை) அதிகாலை சனி பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயரும் சனிப் பெயர்ச்சிநடைபெறுவதால், சனி தலமான திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயருவார். இந்த முறைமிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சனி பகவான் இடம் பெயருகிறார்.
நாளை அதிகாலை 1.24 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனையடுத்து சனி பகவானின் தலமான காரைக்கால்அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால்திருநள்ளாறில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மயமாக இருக்கிறது.
திருநள்ளாறு வரும் பக்தர்கள் அங்குள்ள நள தீர்த்தத்தில் புனித நீராடி தாங்கள் உடுத்தியிருந்த ஆடைகளை அங்கேயே விட்டுச்செல்வார்கள்.
சனிப் பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால், அங்கு போதிய பாதுகாப்புஏற்பாடுகளும், பஸ், ரயில் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து திருநள்ளாறுக்குசிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications