பெட்ரோல் விலை உயர்வு: 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 2ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்படுகிறது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ்தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு தொடர்ந்து 4 முறை பெட்ரோல், டீசல் விலையை அநியாயமாக உயர்த்தியதின்மூலம் தான் ஒரு மக்கள் விரோத அரசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அவர்கள் மீது மேலும் சுமையை ஏற்றும் வகையில், தற்போது 4வது முறையாகபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
இந்த விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வெகுவாக உயரச் செய்து அடித்தள, நடுத்தர மக்களைகடுமையாக பாதிக்கும். ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டுள்ள அதிமுக, இந்த விலை உயர்வைஎதிர்த்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா,
கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும், அந்தமானிலும் மாவட்டத் தலைநகரங்களிலுள்ள வங்கிகள், அஞ்சல்அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் ஆகிய மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற ஜூலை 2ம் தேதி சனிக்கிழமைகாலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications