பெட்ரோல் விலை உயர்வு: தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழகத்தில் லாரி, ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50ம்,டீசல் லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் இடது சாரிக்கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந் நிலையில், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நாடு முழுவதும்இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்தன.
இதன்படி, இன்று நாடெங்கும் உள்ள சுமார் 40 லட்சம் லாரிகள் ஓடவில்லை. கனரக லாரிகள், மணல் லாரிகள், சரக்கு லாரிகள்,காய்கறி லாரிகள், டேங்கர் லாரிகள் ஆகியவையும் நிறுத்தப்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் ஆட்டோக்கள், வேன்கள்மற்றும் சுற்றுலா வாகனங்களும் கலந்து கொண்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் இன்று லாரிகள் ஓடவில்லை. பால் மற்றும், தண்ணீர் லாரி உட்பட அத்தியாவசிய லாரிகள் தவிர அனைத்துலாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் 40,000 லாரிகள் கலந்து கொண்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்தெரிவித்தனர்.
சென்னையிலும் இன்று லாரிகள் ஓடவில்லை. இதனால் சென்னைக்கு வரும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்பல இடங்களில் தேங்கியுள்ளன. இன்று நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அதற்குப் பிறகே சரக்குள் கொண்டுசெல்லப்படும்.
லாரிகள் தவிர தமிழ்நாட்டில் வேன்கள், டாக்ஸி மற்றும் ஆட்டோக்களும் இன்று ஓடவில்லை.












Click it and Unblock the Notifications