கண்ணப்பனைக் காப்பாற்ற வந்த 3 ரூபாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துசேர்த்ததாக தனி நீதிமன்றத்தில் கண்ணப்பன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அடுத்த கட்ட விசாரணை, வெறும் 3 ரூபாய்காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், மக்கள் தமிழ் தேச கட்சியின் தலைவருமான கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னைதனி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கண்ணப்பன் தவிர 21 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11 கோடிய 10 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கண்ணப்பன் உள்ளிட்டோர் மீது புகார்கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள், ரூ.1லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை நீதிமன்றத்தில்போலீஸார் ஒப்படைத்திருந்தனர்.

இந்த வழக்கில் தனி நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சம் ரொக்கப் பணத்தில் 3 ஒரு ரூபாய் தாள்களைக் காணவில்லைஎன்பதை அறிந்து திடுக்கிட்டனர். ரூ. 1லட்சம் ரூபாய் நோட்டுக்களின் அனைத்து எண்களும் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனவே காணாமல் போன ஒரு ரூபாய்த் தாள்களுக்குப் பதில் வேறு நோட்டுக்களையும் கொடுக்க முடியாது. இதனால் காணாமல்போய் விட்ட 3 ஒரு ரூபாய்த் தாள்களையும் தேடும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தால் தான் கண்ணப்பன் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிக்கை நகலைத் தர முடியும்,அதுதொடர்பாக சம்மன் அனுப்ப முடியும். பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் 3ரூபாய் காணாமல் போனதால் வழக்கு விசாரணை ஸ்தம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+