For Daily Alerts
Just In
குமரி கிராமங்களில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாட்ட கடலோர கிராமங்களில் மீண்டு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோர கிராமங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கிவருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது கொந்தளிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலையில்மூழ்கியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட சில கிராமங்களில் கடல்கொந்தளிப்பு அதிகமாக உள்ளது.
ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தில் உள்ள தற்காலிக சுனாமி நிவாரண குடியிருப்புகளுக்குள் கடல் நீர் இன்று காலை புகுந்ததால்மக்கள் பீதியடைந்தனர்.
மொத்தம் 10,000க்கும் மேற்பட்டோர் தாங்கள் தங்கியுள்ள தற்காலிக குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சமூக நலக்கூடங்களில் தங்கியுள்ளனர்.
Story first published: Wednesday, June 29, 2005, 5:30 [IST]