சென்னையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை
டெல்லி:
இந்தியா முழுவதும் இன்று சிபிஐ அதிகாரிகள் அரசு அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில்ஒரு சுங்கத்துறை அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடந்தது.
டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை உட்பட இந்தியா முழுவதும் 60 இடங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினார்கள். குறிப்பாக வருமான வரித்துறை, சுங்கத்துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளின்வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு சுங்கத்துறை அதிகாரியின் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. காலை 6 மணிக்குதிடீரென வீட்டில் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள். இதில் சில முக்கியஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
சுங்கத்துறை அதிகாரி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததால் இந்த சோதனைநடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.