செக் மோசடி: நடிகர் தனுஷ் தாயார் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷின் தாயார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு ஜூலை 19ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை, செளகார்பேட்டையில் ஆர்.வி.மெர்கன்டைல் என்ற பைனான்ஸ் கம்பெனி உள்ளது. இந்த பைனான்ஸ் கம்பெனியில்2000ம் ஆண்டில் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். "பாட்டுச் சத்தம் கேக்குதம்மாஎன்ற படத்தை எடுப்பதற்காக இக்கடனை வாங்குவதாக பைனான்சியர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
கடனை தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் கஸ்தூரி ராஜா வாங்கினார். இக்கடனை அவரால் அடைக்க முடியவில்லை.கடனுக்காக கஸ்தூரி ராஜா கொடுத்த செக் வங்கியில் செலுத்திய போது அது பணமின்றி திரும்பி வந்தது.
இந்த காரணத்தால், எழும்பூர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
நேற்று வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நடந்தது. வழக்கில் ஆஜராக கஸ்தூரிராஜாவின் மனைவி விஜயலட்சுமி நீதிமன்றத்திற்குவந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 19ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications