For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸார் அனைவரும் திருடர்கள் அல்ல: டிஜிபி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காவல்துறையில் மொத்தமே 100 போலீஸார் தான் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்கள். இவர்களைவைத்து ஒட்டுமொத்தமாக காவல் துறையை குறை கூறக் கூடாது என்று தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) அலெக்சாண்டர்கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அலெக்சாண்டர் பேசுகையில், தமிழக காவல்துறையில் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில்100 பேர் மட்டுமே திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுநடவடிக்கைக்குள்ளாகியுள்ளனர்.

1 லட்சம் எங்கே, 100 பேர் எங்கே. நீங்களே யோசித்துப் பாருங்கள். மொத்தமே .001 சதவீதம் பேர் மட்டுமே கருப்பு ஆடுகளாகஉள்ளனர். இதுபோன்று காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்.

எனவே இந்த 100 பேரை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த காவல்துறையையும் குறை கூறக் கூடாது.காவல்துறையினருக்கு மன ரீதியான புத்துணர்ச்சி பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் மன அழுத்தம், பணி நெருக்கடி, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து அவர்களால்விடுபட்டு மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த முடியும் என்றார் அலெக்சாண்டர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X