டிஎஸ்பி மனைவி தற்கொலை: ஜெயலட்சுமிக்கு குற்றப்பத்திரிகை
திண்டுக்கல்:
டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி விசாலாட்சியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஜெயலட்சமி, ராஜசேகர் ஆகியோருக்குதிண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் ஆயுதப்படை டி.எஸ்.பியாக ராஜசேகர் இருந்தபோது ஜெயலட்சமியைத் திருமணம் செய்து கொண்டுதிண்டுக்கல்லில் தனிக்குடித்தனம் நடத்தினார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ராஜசேகரின் மனைவி விசாலாட்சிதீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து விசாலாட்சியை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக ராஜசேகர், ஜெயலட்சுமி ஆகியோர் மீது திண்டுக்கல்மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்ய திண்டுக்கல்நீதிமன்றம் ஜூன் 9ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் பெற்றனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி இருவரும் திண்டுக்கல்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜசேகர், ஜெயலட்சுமிஇருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. 50 பக்கம் கொணட குற்றப்பத்திரிகையில், 32 சாட்சிகள்சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ராஜசேகரின் மகள் தான் முக்கிய சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications