கர்நாடகத்தில் கனமழை: காவிரியில் தண்ணீர் வருமா?
பெங்களூர்:
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் வரும்என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் குறிப்பிட்டபடிகாவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லை.
தற்போது கேரளா மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ளகபினி உட்பட பெரும்பாலான அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபினி அணை கிட்டத்தட்ட நிரம்பும் நிலையில் உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் சில தினங்களில் அணை நிரம்பிவிடும். கபிணி அணை நிரம்பும் பட்சத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்துஅதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications