காளிமுத்து கட்டிய "புத்தக வட்டி!
கோட்டயம்:
கோட்டயம் தமிழ் மன்றத்திற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு தான் அனுப்பிய 300 புத்தகங்கள் போய் சேராததால், வட்டியும்முதலுமாக 1000 புத்தகங்களை வழங்குவதாக சபாநாயகர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராக காளிமுத்து பதவி வகித்தார். அப்போதுகோட்டயம் தமிழ் மன்றத்திற்கு அவர் சென்றார். அப்போது தமிழ் மன்றத்திற்கு நன்கொடையாக 500 புத்தகங்களைவழங்குவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் அவர் சென்னை திரும்பினார். 22 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது தனது மனைவி மனோகரி, மகள்கள்அமுதா, அருள்மொழி, கயல்விழி ஆகியோருடன் கோட்டயம் சென்ற காளிமுத்து தமிழ் மன்றத்திற்கும் விசிட் அடித்தார்.
அப்போது, தான் அனுப்பிய 500 புத்தகங்கள் வந்து சேர்ந்ததா என்று கேட்டார். ஆனால் 200 புத்தகங்கள் தான் வந்ததாகவும்,300 புத்தகங்கள் வரவில்லை என்றும் தமிழ் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து,அப்படியா என்று கூறி விட்டு, சரி, 300 புத்தகங்களுக்கு வட்டியாக 1000 புத்தகங்களை அனுப்புவதாக கூறினார்.
மேலும், சென்னையில் உள்ள தனது உதவியாளருக்கு போன் செய்து தமிழ் தொடர்பான 1000 புத்தகங்களை உடனடியாகஅனுப்புமாறு கூறி என்னென்ன புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், தான் 1983ம் ஆண்டு வந்தபோது தமிழ் மன்றத்திற்கு வழங்கிய வள்ளுவர், பாரதியார் உருவப் படங்கள் தமிழ்மன்றத்தின் சுவர்களை அலங்கரிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். 1000 புத்தகங்களும் வந்து சேர்ந்ததும் எனக்குத் தகவல்கொடுங்கள் என்று தமிழ் மன்ற நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications