For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 ரூபாய் கிடைத்தது! கண்ணப்பனுக்கு சம்மன்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் காணாமல் போன 3 ரூபாய்கிடைத்து விட்டதால், அவருக்கு சம்மன் அனுப்ப சென்னை தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன். தற்போது இவர் திமுக முகாமில் உள்ளார்.மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவராக இருக்கும் கண்ணப்பனின் இப்போதைய பெயர் ராஜகண்ணப்பன் ஆகும்.

கண்ணப்பன் அவரது மனைவி நளாயினி உள்ளிட்ட 20 பேர் மீது சென்னை தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குஉள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கண்ணப்பனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1லட்சம் ரொக்கப் பணம் பிறஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் கண்ணப்பன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு ஆவணங்கள், கைப்பற்றப்பட்டபொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது கண்ணப்பனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்திலிருந்து 3ரூபாயை காணவில்லை.

இதனால் கண்ணப்பன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரூபாய் நோட்டுக்களைத்தேடும் பணியில் கோர்ட் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தற்போது காணாமல் போன ரூபாய் நோட்டுக்களைக் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து வருகிற ஜூலை 29ம் தேதிகண்ணப்பன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மதிவாணன் உத்தரவிட்டு சம்மன் அனுப்பஆணையிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X