போலி வாக்காளர்கள்: அதிமுக மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
போலி வாக்காளர் பிரச்சினையில் அதிமுக மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், போலிவாக்காளர் பிரச்சினையில் அதிமுகவின் முக்கியப் பங்கு தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் தானாகவே வலியப் போய் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குப் போடுமா?
எனவே இந்தப் பிரச்சினையில் அதிமுக மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications