"செக்ஸ் சாமியார் படத்திற்குத் தடை!
சென்னை:
செக்ஸ் சேஷ்டைகளில் சாமியார் ஈடுபடுவது போன்ற கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள "மீண்டும்மீண்டும்" என்ற படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
வைஷாலி சினிகோ என்ற நிறுவனம் "மீண்டும் மீண்டும் என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ஏகப்பட்ட செக்ஸ்காட்சிகளும், கொலை, வன்முறைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக வெளியில் பெரிய சாமியார் போலவும், ஆசிரமத்திற்குள் செக்ஸ் சேட்டைகளில் ஈடுபடுவது போலவும் ஒருகேரக்டரை படத்தில் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஜெயேந்திரர் போல வேடம் அந்தக் கேரக்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.சாமியார் வேடத்தில் நடித்திருப்பவர் படத்தின் இயக்குனரான ரகுநாத் என்பவர்.
இப்படிப்பட்ட பலான காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் ஜூன் 1ம் தேதி தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படம்முழுவதும் பலான காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் நிரம்பி வழிந்ததால் தணிக்கை செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். படத்தையே வெட்டினால் தான் ஆச்சு என்று அவர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து சின்னச் சின்ன கரெக்ஷன் செய்து கடந்த 22ம் தேதி மீண்டும் தணிக்கைக்கு படத்தை அனுப்பினர். ஆனால்படத்தில் இன்னும் ஆபாசமும், வன்முறையும் தூக்கலாக இருப்பதாக கூறி தணிக்கை செய்ய முடியாது என்று தணிக்கை குழுஅதிகாரிகள் கூறி விட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications