மழை வெள்ளம்: மோடியுடன் ஜெ பேச்சு- ரூ. 5 கோடி உதவி
சென்னை:
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்கு தமிழகத்தின் சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியை முதல்வர்ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
நிவாரணப் பணிகளுக்கு இந்த நிதியை வழங்கியுள்ளதோடு, குஜராத்துக்கு அனைத்து வகைகளிலும் தமிழகம் துணை நிற்கும்எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சுனாமி தாக்குதலின்போது தமிழகத்துக்கு குஜராத் வழங்கிய உதவியை நினைவு கூர்ந்துள்ள ஜெயலலிதா, மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டுள்ள அம் மாநில மக்களுக்கு தமிழக மக்களும் தனது அரசும் உறுதுணை நிற்பார்கள் என கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் தமிழகத்தில் இருந்து மீட்புப் பணிக்கு ஆட்களை அனுப்பவும், பொருட்களை அனுப்பவும் தயாராகஇருப்பதாகவும் மோடியிடம் ஜெயலலிதா கூறினார்.
அதே போல குஜராத் மாநில தலைமைச் செயலாளரோடு தொடர்து தொடர்பில் இருக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 5 கோடிக்கான உதவி நிதி காசோலையை மோடியிடம் நேரில் வழங்க தமிழகசட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழு குஜராத் செல்கிறது.












Click it and Unblock the Notifications