மழை வெள்ளம்: மோடியுடன் ஜெ பேச்சு- ரூ. 5 கோடி உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்கு தமிழகத்தின் சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியை முதல்வர்ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய ஜெயலலிதா, அம் மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்துவிசாரித்தார். அங்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், பொருட் சேதத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜெயலலிதா, அம்மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடியை தமிழகத்தின் சார்பில் அளிப்பதாகத் தெரிவித்தார்.

நிவாரணப் பணிகளுக்கு இந்த நிதியை வழங்கியுள்ளதோடு, குஜராத்துக்கு அனைத்து வகைகளிலும் தமிழகம் துணை நிற்கும்எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சுனாமி தாக்குதலின்போது தமிழகத்துக்கு குஜராத் வழங்கிய உதவியை நினைவு கூர்ந்துள்ள ஜெயலலிதா, மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டுள்ள அம் மாநில மக்களுக்கு தமிழக மக்களும் தனது அரசும் உறுதுணை நிற்பார்கள் என கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் தமிழகத்தில் இருந்து மீட்புப் பணிக்கு ஆட்களை அனுப்பவும், பொருட்களை அனுப்பவும் தயாராகஇருப்பதாகவும் மோடியிடம் ஜெயலலிதா கூறினார்.

அதே போல குஜராத் மாநில தலைமைச் செயலாளரோடு தொடர்து தொடர்பில் இருக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 5 கோடிக்கான உதவி நிதி காசோலையை மோடியிடம் நேரில் வழங்க தமிழகசட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழு குஜராத் செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+