அணையைப் பாதுகாக்க தண்ணீர் திறந்து விடும் கர்நாடகம்
பெங்களூர்:
கர்நாடகத்தின் கபினி அணை நிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்துவினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் அது வினாடிக்கு 15,000 கன அடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 65 அடியாகும். அணையில் தற்போது 62.25 அடி நீர் இருப்பு உள்ளது. இன்று அல்லதுநாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.
கபினியிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் வெள்ளிக்கிழமை தமிழக எல்லையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று பிற்பகல் நிலவரப்படி 51 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 201கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 895 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications